குறிக்கோள்
குறிக்கோள்
என
எதையும்
ஏற்றுகொள்ள
முன்வரவில்லை
இதயம்!!!
கனத்த மனதுடனும்
கசிந்தகண்களுமாய்
பெற்றோர்.
குறிக்கோள்அற்று இருக்கிறானே
"மகன்"
என்று!!!
குறிக்கோள்
என்றவுடனே
பதறுகிறது
மனம்.
எதனோடவாது
பற்றுகிறது!!
தொடுப்புகளில்
தொக்கி
துக்கபடுகிறது!!
முடிச்சுகளில்
முயங்கி போகிறது!!!
தேவைகள்
தீர தீர
புதிதாக பிறக்கிறத!!!
இன்று பணம்,
நாளை புகழ்,
மறுநாள் காமம்,
என மூன்றின்
தேவை
சுற்றி சுற்றி வர
தேவைகள்
மட்டும்
தீர்ந்துபோவதில்லை!!
தேவைகளால்
போராடுகிறோம்!!!
வலிபடுகிறோம்!!!
சுகதுக்கங்கள்
அளக்கிறோம்!!
குறிக்கோளுக்கு
இனங்கிவிட்ட
மறுகணம்
மதம் பிடித்துவிடுகிறது
மனம்!!!
ஒவ்வொருமுறையும்
குறிக்கோளை
அடைந்துவிடுவதாய்
கற்பனித்தாலும்
தோல்வியடைவது நான் தான்.
என்னில்வேலி
போடவிரும்பவில்லை.
எனது
வாழ்க்கையில்
மிதவையாய் மிதக்கிறேன்.....
நீராய் ஒழுகுகிறேன்
பறவையாய் பறக்கிறேன்!!
தீயாய் கனல்கிறேன்!!
காற்றாய் கசிகிறேன்!!
என்னில்
எங்கும் கரைகள்
இல்லை!!!
எதற்கும்
மடைகள் இல்லை!!!
முகாரிகளும் முகாமிடும்!!!
சந்தோசங்களும் குஷிக்கும்!!!
எதையும் நிராகரிக்கவில்லை!!!
எல்லாமுமாய்இருக்கிறேன்.
"நானை" அழித்து!!!
எனது குறிக்கோளேஇக்கணம்தான்!!!
(சொல்லி முடிப்பதற்குள் இக்கணம் கை நழுவி போய்விட்டது )
Tuesday, December 25, 2007
|
Labels:
குறிக்கோள்
|
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......
Popular Posts
-
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்! பாண்டியர்களின் ஆபத்துதவிகளின் ராஜதந்திரம் மற்றும் அவர்களின் அறம்! ஒரு பெரிய ஹீ...
-
எனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வெ...
-
தனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ " உணர்" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞானம் !!...
-
மரணம் நம் அனைவருக்குமுண்டு என்ற ஒரே பயங்கரமான உண்மை தான் இந்த உலகில் அன்பு இன்னும் இருப்பத்ற்க்கான ஆதாரமாக இருக்கிறது.... எனது வெறுமை என்னை ...
-
என்னவோ எப்பவும் நில்லா காற்றாக நிரைந்து நெருக்குகிறது, பூர்த்தி செய்த பின்னும் அப்படியே......
-
நிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன்!!! லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...
-
முகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது!!! எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...
-
நிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் வி...
-
நசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட "ரட்சியும் பிதாவே" என்று "கெடா வெட்டி" "குர்பான்" செய்திருக்குமோ எனக்கு...
-
Why we always loose what we search for??? we can put it like this, If we can stop searching our pre-imbibed memories and teaching then we w...

0 comments:
Post a Comment