Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

உணர்வு

என்னால் பிறப்பு இறப்பை ிடவிந்தையாய் என்னத்துணிவது உணர்வுகளைத்தான்.....

அது எப்படி...எங்கே...எவ்வாறு....எவ்வகையில்உருவெடுக்கிறதென உத்தேசமாய் கூட உணர முடியவில்லை???

கோபம்,காதல்,சுகம்,துக்கம் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ பல்வேறு நாமங்கள் சூடி அறியப்பட்டாலும் நம்மின் எவ்விடத்தை உறைவிடமாய்கொண்டுள்ளதென தெளிவாய் உணர முடிவதில்லை......

பசி,வலி,காமம் வஞ்சம் என இன்னுமும் குழுமி கூட.....உணர்வுகளின்அளவு கோலாலே மனிதமும் அளக்கப்பட, உணர்வுகளின் குழுமமோ மனிதன் என அய்யமேற்பட, சற்றே அயர்வுதான்.

உள் வெளியில்சற்று கூட முயற்சியின்றி உணர்வு உருவாகிட, உருவாகும் உணர்வுக்கும் உள் வெளிக்கும் உறவேதும் இருப்பதுபோல் உணரவில்லை.

உள்வெளியிலே உணர்வு தோன்றிடின் "உள்வெளியே" இயல்பு."உணர்வு" அல்ல....

உணர்வு உண்மை அல்ல எனில் உணர்வின் குழுமமான மனிதனும் உண்மையல்ல...மனிதன் உண்மையல்ல அப்படியா......???

Popular Posts

Blog Archive

Followers