Showing posts with label குறிக்கோள். Show all posts
Showing posts with label குறிக்கோள். Show all posts

குறிக்கோள்

குறிக்கோள்
என
எதையும்
ஏற்றுகொள்ள
முன்வரவில்லை
இதயம்!!!
கனத்த மனதுடனும்
கசிந்தகண்களுமாய்
பெற்றோர்.
குறிக்கோள்அற்று இருக்கிறானே
"மகன்"
என்று!!!
குறிக்கோள்
என்றவுடனே
பதறுகிறது
மனம்.
எதனோடவாது
பற்றுகிறது!!
தொடுப்புகளில்
தொக்கி
துக்கபடுகிறது!!
முடிச்சுகளில்
முயங்கி போகிறது!!!
தேவைகள்
தீர தீர
புதிதாக பிறக்கிறத!!!
இன்று பணம்,
நாளை புகழ்,
மறுநாள் காமம்,
என மூன்றின்
தேவை
சுற்றி சுற்றி வர
தேவைகள்
மட்டும்
தீர்ந்துபோவதில்லை!!
தேவைகளால்
போராடுகிறோம்!!!
வலிபடுகிறோம்!!!
சுகதுக்கங்கள்
அளக்கிறோம்!!
குறிக்கோளுக்கு
இனங்கிவிட்ட
மறுகணம்
மதம் பிடித்துவிடுகிறது
மனம்!!!
ஒவ்வொருமுறையும்
குறிக்கோளை
அடைந்துவிடுவதாய்
கற்பனித்தாலும்
தோல்வியடைவது நான் தான்.
என்னில்வேலி
போடவிரும்பவில்லை.
எனது
வாழ்க்கையில்
மிதவையாய் மிதக்கிறேன்.....
நீராய் ஒழுகுகிறேன்
பறவையாய் பறக்கிறேன்!!
தீயாய் கனல்கிறேன்!!
காற்றாய் கசிகிறேன்!!
என்னில்
எங்கும் கரைகள்
இல்லை!!!
எதற்கும்
மடைகள் இல்லை!!!
முகாரிகளும் முகாமிடும்!!!
சந்தோசங்களும் குஷிக்கும்!!!
எதையும் நிராகரிக்கவில்லை!!!
எல்லாமுமாய்இருக்கிறேன்.
"நானை" அழித்து!!!
எனது குறிக்கோளேஇக்கணம்தான்!!!

(சொல்லி முடிப்பதற்குள் இக்கணம் கை நழுவி போய்விட்டது )

Popular Posts

Blog Archive

Followers