சமர்
நான் இந்த களத்தில் போர் புரிகிறேன்....
எனது சிந்தனை
காட்டுப்பாதையிநூடே
செல்கிறது.....
முன்னிரவில் கூட
யாரும்
சென்றதன்
சாத்தியமற்ற
சதுப்பு
நில சகதிகளில்
எனது வீரம்
முங்கி முங்கி
குளிக்கிறது
எனது
கப்பல் கரையில்
சுகப்பட்டு
சூனியமாகி
கிடக்க
பிறக்கவில்லை
இடிமேகங்களிநூடே
பிறழாது...
பிறழ்ந்தாலும்
வெறி கொண்டு
மீண்டும் மீண்டும்
புதிதான
இந்த
புதிய தளத்தில்
இதற்க்கு
முன் தெரியாத
வீரர்களுடன்
ரௌத்திரம் பழகுகிறேன்....
இழப்புகளை ஏற்படுத்தியும்
இழப்புகளை ஏற்றுக்கொண்டும்
அடிகள் கொடுத்தும்
அடி வாங்கியும்
இவ்வளவுதான்
நீள அகலம்
இருக்க வேண்டுமென்ற
விதிமுறைகள் தெரியாது
எனக்கு நானே விதிகள் சமைத்து
எனது
காலடிகளை
அளந்து வைத்திருக்கின்றேன்.
எனது
வெற்றியில்
பங்குகள் போடவும்
அனுமதிப்பதில்லை
தோல்விகளில்
ஆறுதலுக்காக
தோள் தேடுவதில்லை
எனது
திட்டங்கள் சின்னாபின்னப்ப்படும்போது
நான் தெளிவாகவும்
தோல்விகளில்
மிக
கர்வத்துடன்கூடிய நம்பிக்கையோடு....
பல
தோல்விகளோடு
கூடிய
வெற்றிகளை
விழுப்புண் மாரோடு
மையத்தில் நின்று
வாழ்த்துப்பா கொண்டு
வரவேற்த்தாலும்
எனது
தன்முனைப்பின்
வெற்றி வெறியின்
தாகம்
தீர்பபதை விட
எனது
வெற்றியில்
கூட
பிறரின்
தோல்வி
கூடாதெனும்
மனிதநேயமே
மிஞ்சி
கொஞ்சுகிறது....
Monday, December 24, 2007
|
Labels:
சமர்
|
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

0 comments:
Post a Comment