போதி மரத்துப் பௌதீகம்!!!

எனக்கென்றிருந்த ஒரு பாதியில் 
பெரும் மீதியாய் 
மிச்சமிருப்பவள் 
நீ!

உனக்கென்றிருந்த வேதியியலில் 
அணு ஆதியாய் 
சொச்சமிருப்பவன் 
நான்!

சேர்மங்களின் 
அறிவியல் மய்யம்
நான்!

ஓர்மைகளின் 
அரிச்சுவட்டு அய்யம் 
நீ!!

போதி மரத்தடியில் 
பௌதீகம் பேசுகின்ற 
இயற்பியல் 
நீ!

ஒழுங்கற்ற வனத்தில் 
ஒழுங்கு பேசுகின்ற 
இயங்கியல் 
நான்!

கலவியில் ஒழுங்கு நான்.....
விலகையில் விலங்கு நீ......

துச்சாதக் கைகள் நான்....
வற்றாத வைகை நீ!!

குற்றாலச் சீறல் நீ...
குற்றங்களின் பிள்ளை நான்!!

எட்டாத எல்லை நீ...
என்றுமுந்தன் தொல்லை 
நான்!!!

Pic Courtesy:- Nivethapethuraj

0 comments:

Popular Posts

Blog Archive

Followers