விட்டு,விடுதலையாகி......

முகம்
எனக்கு என்னவோ எப்பொழுதும்
நிறைய கிடைக்கிறது!!!
எனக்கு தேவைப்படுவதும்
என்னிடம் தேவைப்படுவதுமாக,
அனேக முகங்கள்
அடுக்கடுக்காக
எனது அகமாறியில்
அடுக்கிவைக்கப்பட்டு
இருக்கிறது!!!
ஒரு நாளைக்கு
ஒன்றென்று
சில பொழுதில்.
ஒரு வேளைக்கு
ஒன்றென்று
சில பொழுதில்.
சில பொழுதில்
நொடிக்கொன்றாக
தேவைப்படுகிறது
எனக்கும்,
என்னிடம் பிறருக்கும்!!!
எனக்கு பொருத்தமானதை
எனக்கு நானே
பொருத்திக்கொள்வதை விட
அவரவர்களுக்கு
விருப்பமானதையும்
தேவையானதையும்
எனக்கு
அணிவிப்பதே
எல்லோருக்கும்
எப்பொழுதும்
பிடித்திருக்கிறது!!!
பசி,வலி,காமம்,வஞ்சம்
என பல முகங்கள்
உணர்வாய்
குழுமி நானாய்
பொருள்பட.....
முகங்களே எனது அளவுகோலாக
சற்றே அயர்வுதான்.
எப்படித்தான் கழற்றினாலும்
எதாவது ஒரு
முகம்
எப்படியோ
ஒட்டிக்கொள்ளதான் செய்கிறது
பிணைப்புகள்,
பிணக்குகள்,
சங்கடங்கள்,
சடங்குகள்,
வஞ்சங்கள்,
வக்கிரங்கள்,
வாதங்கள்,
பூசல்கள்,
என
என்னுள்
முகாமிட்டுள்ள
முகங்கள்!!!
வாடகை முகங்கள்
அனைத்திலிருந்தும்
விலகி,
விட்டு
விடுதலையாகி
நீராய்...
நெருப்பாய்....
மலையாய்....
வானாய்....
வெளியாய்....
ஆடாய்.....
மாடாய்.....
ஆறை மறந்த ஏழாய்.....
பிரபஞ்சத்தின்
பின் வெளியில்
பித்தனாய்,
புத்தனாய்,
நாபிக்குள் இருக்கும்
நானாய்
சுகிக்க ஆசை!!!
வல்லமை தாராயோ....?
என்
சூனியத் தாயே

எதை விட........???!!!!

சின்னஞ்சிறு
துவேசமும்
என்னை
சினம் கொள்ள
செய்கிறது!!
புகழ்
என்னை
போதை
கொள்ள செய்கிறது!
என்னிடம்
இல்லாததை
பிறரிடம் காணும்
பொழுது
பொறாமை கொள்கிறது!!!
அழகு
ஆளுமை படுத்த நினைக்கிறது!!
சில நேரம்
பிறர்
துன்பம்துடைக்க
விளைகிறது!!
காமமும் தலைக்குஏறுகிறது
கடவுளும்கண்ணை மறைக்கிறது
உறவும் உசுப்பெற்றுகிறது
துறவும் துரத்துகிறது!!!!
என்னுள்ளே
சகலமும்
சகல,சமவிகிதமாய்
சந்ஜாரித்து கொண்டிருக்க
"விட்டுவிடுதலை"
பற்றுகிறது
மனம்.
இதில்
எதை "விடுவது"
என்னில்
இருக்கும்
எதை விட.........?
என்னையே விடவா........????.....

துரத்தல்.........? துறத்தல்...?

சகலத்தையும்

சகிக்காது,

ஓடி ஒளியும்

கோழை போல்

துறப்பதற்கு

ஏதும் இல்லாத போதும்,

துறப்பது போல

துறவற

நாடகம் கொள்ளுவது துறவா...?

இல்லறத்தை

அனுபவித்து

சுக துக்கம் அறிந்து

இதனூடே சுகித்து

இதனின் வேரோடு

உறவு கொள்ளாது,

சமரிட்டு

சாம்ராஜியங்கள்

சேகரித்து

வெற்றி தோல்வி

சமன் செய்து

விரும்பாது விரும்பி,

இல்லாமல் இருந்து,

துறப்பதற்கு எல்லாம் இருந்தும்...

மனதில் இருந்து துரத்தலே துறவோ....???


துரத்தல்.........? துறத்தல்...?

சகலத்தையும்

சகிக்காது,

ஓடி ஒளியும்

கோழை போல்

துறப்பதற்கு

ஏதும் இல்லாத போதும்,

துறப்பது போல

துறவற

நாடகம் கொள்ளுவது துறவா...?

இல்லறத்தை

அனுபவித்து

சுக துக்கம் அறிந்து

இதனூடே சுகித்து

இதனின் வேரோடு

உறவு கொள்ளாது,

சமரிட்டு

சாம்ராஜியங்கள்

சேகரித்து

வெற்றி தோல்வி

சமன் செய்து

விரும்பாது விரும்பி,

இல்லாமல் இருந்து,

துறப்பதற்கு எல்லாம் இருந்தும்...

மனதில் இருந்து துரத்தலே துறவோ....???

சின்னஞ்சிறு
துவேசமும்
என்னை
சினம் கொள்ள
செய்கிறது!!
புகழ்
என்னை
போதை
கொள்ள செய்கிறது!
என்னிடம்
இல்லாததை
பிறரிடம் காணும்
பொழுது
பொறாமை கொள்கிறது!!!
அழகு
ஆளுமை படுத்த நினைக்கிறது!!
சில நேரம்
பிறர்
துன்பம்துடைக்க
விளைகிறது!!
காமமும் தலைக்குஏறுகிறது
கடவுளும்கண்ணை மறைக்கிறது
உறவும் உசுப்பெற்றுகிறது
துறவும் துரத்துகிறது!!!!
என்னுள்ளே
சகலமும்
சகல,சமவிகிதமாய்
சந்ஜாரித்து கொண்டிருக்க
"விட்டுவிடுதலை"
பற்றுகிறது
மனம்.
இதில்
எதை "விடுவது"
என்னில்
இருக்கும்
எதை விட.........?
என்னையே விடவா........????.....

********************************************************************************************
விட்டு,விடுதலையாகி.......
பிணைப்புகள்,
பிணக்குகள்,
சங்கடங்கள்,
சடங்குகள்,
வஞ்சங்கள்,
வக்கிரங்கள்,
வாதங்கள்,
பூசல்கள்,
என
என்னுள்
முகாமிட்டுள்ள
முகங்கள்?
வாடகை முகங்கள்
அனைத்திலிருந்தும்
விட்டு விலகி
விடுதலையாகி
நீராய்...
நெருப்பாய்....
மலையாய்....
வானாய்....
வெளியாய்....
ஆடாய்.....
மாடாய்.....
ஆறை மறந்த எழாய்.....
பிரபஞ்சத்தின்
பின் வெளியில்
பித்தனாய்,
புத்தனாய்,
நாபிக்குள் இருக்கம்
நானாய்
சுகிக்க ஆசை!!!
வல்லமை தாராயோ....?
என்
சூனியத் தாயே...?

விடைகள் இல்லா வினவுகள்

நிறையத்தான் படித்திருக்கிறேன்.

நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன்.

வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் வியந்து தான் இருக்கின்றனர்.

இப்படி என்னை பற்றியான பல பிம்பங்கள், நான் விரும்பியோ விரும்பாமலோ என்னை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

"நான் யார்" என்ற ஆகப்பெரிய "உட்கண்" கொண்டு காணவேண்டிய ஆன்ம ரீதியான கேள்விகளை கூட சில சமயங்களில் அனாயசமாக சமாளித்திருக்கிறேன்.

தொழில் முறை சம்பாஷணைகளிலும் பரிபாஷைகளிலும் முடிந்த அளவிற்கு முதன்மையானவனாகவே இருந்திருக்கிறேன்.

அத்தனை பெரிய எனது அகந்தையை நொடிப்பொழுதில் தகர்த்து தூக்கி எரிந்தது எனது மூன்று வயது குழந்தையின் கேள்விகள் ......

அப்பா,

நீங்க என்ன பண்றிங்க ???
உங்க தலைல ஏம்ப்பா முடி இல்லை???
ஏம்பா நிலாவை எத்தனை தடவை கூப்பிட்டாலும் கீழே வரவே மாட்டேங்குது!!!!
நீங்க ஏம்ப்பா கருப்பா இருக்குறீங்க????

இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு என்னிடம் எப்பொழுதுமே பதில் இல்லை,அகந்தை நொறுங்கிய ஒரு சிறு புன்னகை தவிர்த்து.........

படிப்பினை.....

எனது தவறுகளின் படிப்பினைகள்,
எனது வாழ்வின்
மதிப்பீடுகளாய் மறுவுருவெடுத்து,
கொள்கையாய்,
குழுமி
பிறகொரு
தவறிழைக்க
தடுக்கிறது.

விழுதல்

ஒவ்வொரு
முறை
விழுகாவிட்டாலும்
எப்படியாவது
ஏதாவது ஒரு முறை
விழுந்து விடுகிறேன்!!
விழுவதற்காக
எழுகிறேனா?!
அல்லது
எழுவதற்காக
விழுகிறேனா1?
ஏதோ ஒன்று.
விழுந்தாலும் சரி
எழுந்தாலும் சரி
தீர்மானிப்பது
நான்என்பதால்?!?!?
சந்தோசம் தான்.

Popular Posts

Blog Archive

Followers