துரத்தல்.........? துறத்தல்...?

சகலத்தையும்

சகிக்காது,

ஓடி ஒளியும்

கோழை போல்

துறப்பதற்கு

ஏதும் இல்லாத போதும்,

துறப்பது போல

துறவற

நாடகம் கொள்ளுவது துறவா...?

இல்லறத்தை

அனுபவித்து

சுக துக்கம் அறிந்து

இதனூடே சுகித்து

இதனின் வேரோடு

உறவு கொள்ளாது,

சமரிட்டு

சாம்ராஜியங்கள்

சேகரித்து

வெற்றி தோல்வி

சமன் செய்து

விரும்பாது விரும்பி,

இல்லாமல் இருந்து,

துறப்பதற்கு எல்லாம் இருந்தும்...

மனதில் இருந்து துரத்தலே துறவோ....???


0 comments:

Popular Posts

Blog Archive

Followers