பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்! 

பாண்டியர்களின் ஆபத்துதவிகளின் ராஜதந்திரம் மற்றும் அவர்களின் அறம்! 

ஒரு பெரிய ஹீரோக்கு நல்ல வில்லன் அமையனும். 

இந்தக்கதையிலும் சரி திரைப்படத்திலும் சரி, பழுவேட்டரையர்கள், பாண்டிய குல ஆபத்துதவிகள், மற்றும் அவர்களின் திறமை தான் முக்கிய கருத்தாக அமைகின்றது. 

சோழ அரச குடும்பம் ஒரு போர்க்குடும்பமாகத்தான் அமையப்பட்டிருக்கிறது. 

நாட்டின் நிதி பாதுகாப்பு எல்லாமே பழுவேட்டரையர்கள் தான்! 

அரச குலத்தவர்கள் சும்மா எதோ வேட்டக்காரர்கள் மாதிரி போர் செஞ்சுருக்காங்க 😜 

ஸோ முழுமுதற்காரணம் பாண்டியர்களின் விட்டுக்கொடாத தன்மை இந்நாவலிற்கும் திரைப்படத்திற்கும் சோழற்களுக்கும் வலு! 

இரண்டாவது, மணிரத்தினம் 

வந்தியத்தேவனின் பாயிண்ட் ஆஃப் வியூவில் கதை சொல்லியிருக்கும் கல்கிக்கு போட்டியாக ஒரு "குட்டி கல்கியாக" தன்னுடைய பாயிண்ட் ஆஃப் வியூவிலிருந்து கதை சொல்லியிருக்கிறார். 

மணி ரத்தினத்தின் தலையில் வைரமும் முத்தும் இல்லாத  ஒரு மகுடம் ! வாழ்த்துக்கள்! 

மூன்றாவது, ஜெயமோஹன்! 

ஜெயமோஹன் என்று சொன்னாலே எனக்கு குமட்டிக்கொண்டு வரும் என்ன காரணமோ தெரில! 

திரு. கமல் ஹாசன் அவர்களிடம் பலமுறை ஜெயமோஹன் குறித்து சர்ச்சையிட்டிருக்கின்றேன்! 

ஆனால் முதல் முறையாக அவருக்கு ஒரு லால் சலாம் போடுகிறேன்! பொன்னியின் செல்வனின் ஜெயமோஹனுக்காக! 

நான்காவது, ஐஸ்வர்யா ராய் என்கின்ற தேவதைக்கு முன் திரிஷாவே திணறினாலும் நம்மை கொள்ளை கொள்கிறார். ஆனால் அவரையும் தாண்டி பூங்குழலியாக ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி! 

ஜகமே தந்திரத்திலேயே மிரட்டியிருப்பார் அர்ச்சனா 31 நாட் அவுட் படம் பார்த்து நான் அவுட்டாகி இருந்தேன்! 

இந்தப் படத்தில் அவரைப் பார்த்த பிறகு.......

பொன்னியின் செல்வி பூங்குழலி ஐஸ்வர்ய லக்‌ஷ்மிக்கு அனேக அன்பு! 
ஐந்தாவது, 

எடிட்டிங்! 

போரடிக்காம இருந்த ஒரு நாவலை போரடிக்காத திரைக்கதை, போரடிக்காத காட்சியமைப்புகள் என்று இருந்தாலும், அதை மிக நேர்த்தியாக எடிட் செய்த ஶ்ரீகர் ப்ரசாத்திற்கு தான் முழு க்ரெடிட்டும் போய் சேரனும்! அது தான் முறை! 

குறை .

இ(ம்)சை

0 comments:

Popular Posts

Blog Archive

Followers