ஜெயமோஹன் என்கின்ற எழுத்தாள விசம்!

'வைரமுத்துவை பயன்படுத்தாதற்கு காரணம் இளையவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகத்தான். 

புதுபுதுசா நிறையபேர், 
தமிழ் சார்ந்து ரிசர்ச் செய்யும் நிறைய ஆளுமைகள் இருக்கிறார்கள் அவர்களை பயன்படுத்தத்தான்' என்று மணிரத்தினம் தெரிவித்து இருக்கின்றார். 

புதுசு புதுசா ரிசர்ச் செய்யும் ஆளுமைகள் என்று அவர் குறிப்பிடுவது "ஜெயமோகன் மற்றும் அவரது விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்கள்" என்பதை நினைத்துப்பார்க்கவே "உவ்வே" வருகிறது. 
இந்த மேட்டுக்குடித்தனத்தை மேட்டிமைத் தனத்தை நாம் "ஆரியகுடுமி" என்று எதேச்சையாகவும் எதார்த்தமாகவும் விட்டுவிட முடியாது! 

திராவிடம் மற்றும் தமிழ் இலக்கியங்களை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்போம், 

"தீ பரவட்டும்" என்று பெரும் உணர்ச்சி மிகு போராட்டத்தை கையிலெடுத்து விளையாடினார். 

இன்றைய நவீன தமிழ் இலக்கிய எளைஞர்கள் தயவு கூர்ந்து அந்த அறிவுசார் விவாதங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். 

இல்லாவிட்டால்,வைரமுத்து பாட்டெழுதாதை எதோ #MeToo  போராட்ட நாயகி சின்மயி, மணிரத்தினம் ஜெயமோகன் போன்றவர்களின் உச்சகட்ட தியாக வேள்வி தான் காரணம் என்றும், 

பெண்களை வெறும் பாலியல் பலாத்காரம் செய்ய பயன்படுத்தும் "ஸ்த்ரி லோலன்களை" ஒதுக்கித்தள்ளுவோம் என்கின்ற வகையில் மட்டுமே பார்க்கப்படும். 

தமிழ் மன்னர்களையும் திராவிடத்தையும்  சொந்தம் கொண்டாடத் துடிக்கும் இந்த ஆரியக்குடுமிகள் பாடுவது பழைய புராணம் தான்! 

இதே பழைய புராணக்கதையில் உருவானது தான் இளையராஜாவை ஒதுக்கியதும் (பா.ரஞ்சித் போன்ற அம்பேத்கரிய வியாதிகளும், சங்கி மங்கி என்றால் என்ன என்பதை கூட கூகுளில் தேடிப்படிக்கும் திராவிடக்குஞ்சுகளும் இளையராஜாவை ஒதுக்குவது வேற விசயம்) 

சரி விசயத்துக்கு வருவோம்.

தமிழ் இலக்கிய பாலில் மெல்ல மெல்ல நஞ்சைக்கலக்கும் ஜெயமோகன் மற்றும் அவரது குஞ்சுகளும் தமிழ் சினிமாவில் இலக்கிய வேலை பார்ப்பது யாருக்காக என்று எண்ணிப்பார்த்தாலே நமக்குப் புரிந்து விடும். 

 ஏறத்தாழ  அவாளும், அய்யங்காரும், திருமலை நாயக்க மன்னர் பரம்பரை என உயர்சாதி குடுமி ஆடும் இடங்களில் மட்டுமே பணிபுரிவர். 

நான் கடவுள் பாலா எனும் ஆதிக்கசாதி உணர்வு கொண்டவர் என்பதும் அனைவரும் அறிந்ததே! 

இப்படி மேட்டுக்குடியினராகப் பார்த்து பார்த்து சேவகம் செய்ய்ம் ஜெயமோஹனை என்ன சொல்வது. 

இது குறித்து யாரேனும் ரிசர்ச் செய்தால் தமில் சிணிமாவும் இழக்கியமும் வாலும்..... 

ஸோ மணிரத்தினங்கள் எத்தனைதான் கட்டியம் கட்டினாலும் வைரமுத்துக்களை ஒன்றும் செய்ய இயலாது. 

"ராவணனுக்கும்"  "கடலுக்கும்" இருக்கின்ற வித்தியாசத்தை கொள்கை ரீதியாக புரிந்து கொள்ள முடியாதவர் இல்லை மணிரத்தினம் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில், 

ஜெயமோகன் போன்ற எழக்கிய விச ஜந்துக்களை ஒதுக்கி மீண்டும் சினிமாவிற்கான விழுமியங்களை எடுத்து பணியாற்றுங்கள். 

அய்யர், அய்யங்கார், பிள்ளைவாள், செட்டியார், முதலியார், தேவர், கவுண்டர், மற்றும் அனைத்து இடைசாதியினருக்கும், மேலும் பள்ளர் பறையர் என இதைப்படிக்கும் அனைத்து சாதி நண்பர்களுக்கும் இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன். ஏனெனில் ஜெயமோகனை கொண்டாடுவது தமிழுக்கு இழைக்கப்படும் ஒரு துரோகமும் வன்மமுமாகவே பார்க்க வேண்டும். 

பின் குறிப்பு: 

" பொன்னி நதி பாக்கனுமே பொழுதுக்கொள்ளே"

0 comments:

Popular Posts

Blog Archive

Followers