செம்பயிருக்கு வேர்.....

இந்தி பேசத்தெரிந்த தமிழர்கள் கூட பலர் இருக்கிறார்கள் என்பதை இந்தியச் சமூகத்துக்குச் சொல்லிக்கொள்ளும் கடமையுடனும் பொறுப்புடனும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை!!!

அன்றைய திராவிட இயக்கங்கள் "தமிழ் " என்கின்ற ஒற்றைச்சொல் மூலமாக உணர்வு ரீதியாக தமிழர்களை ஒன்றிணைக்க 
முயன்று வென்றனர். 

ஆனால் இன்றைய திராவிட இயக்கங்கள், தங்கள் சுயநலத்திற்காக தமிழர்களின் உணர்வுகளைப் புண்ணாக்கி, 
அதை வணிகம் செய்து, தங்கள் அரசியல் வளர்ச்சிக்காகவும், குடும்ப லாபத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்தி மொழிவியாபாரம் செய்து வருகின்றனர். 

திராவிடத்தை பெயரில் மட்டும் வைத்து தனது தேர்தல் அரசியல் வியாபாரத்தை, இன்று  வட இந்தியத் தலைமையிடம் கொடுத்து, 

முட்டுச் சந்திற்குள் மொழியின் மொத்த வியாபாரம் செய்யும் முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே,

நாமும் சின்னதாய் சில்லரை வியாபாரம் செய்யலாமே என்று வணிக அரசியல் செய்ய வந்த 
"நாங்க மட்டுமே தமிழர்கள்" போன்ற கட்சிகள் இதை "தமிழ்ச் சர்வாதிகார" நோக்கில் பயன்படுத்தத் துவங்கினர். 

தமிழர்களின் அறிவு மிகவும் விரிவானது. 
அது நல்லவைகளை தேர்ந்து அல்லவைகளை நீக்க வல்லது. 

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு" என்று சொல்லிய அறிஞர்களைக் கொண்டது. 

'கெடல் எங்கே தமிழர் நலம் அங்கே கிளர்ச்சி செய்' என்று புரட்சிக்கு வித்திட்ட வீரமரபு கொண்டது. 

எனவே டி சேர்ட்டில் தமிழுணர்வை சேர்த்து தமிழர்களை ஒன்றிணைக்க நினைக்கும் வட இந்திய தேர்தல் நிபுணர்களின் அரைகுறை பேச்சில் ஆர்வம் கொள்ளாமல்,

நல்ல தமிழர்கள் விரும்பினால் அமைதியாக இந்தி படிக்கலாம்! இன்னும் பல மொழிகள் கற்கலாம். தவறில்லை!

" தமிழன் என்பது தகுதி அல்ல அது அடையாளம் மட்டுமே" என்று சொல்லும் தலைவர்களைக் கொண்டது நம் தமிழ் நாடு!! அவர் சொல் கேட்போம் .

மெல்லச் சாக, தமிழ் என்ன சமஸ்கிருதம் போல கடவுளின் மொழியா? 

இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!!!

தமிழ்த்தீ பரவும்...... 
ஆனால் எவரின் வணிகமோ வயிறையோ  வளர்க்க அல்ல, தமிழர்களின் வளம் வளர்க்க மட்டும் தான்!! 

பின் குறிப்பு:- 

வினா: அன்றைய திராவிட இயக்கங்கள் இன்றைய திராவிட இயக்கங்கள் வித்தியாசம் என்ன?

விடை: இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி காங்கிரஸ், அப்படின்னு இன்னிக்கும் பல பேரு நெனைக்கிற மாதிரியான ஒரு முட்டாள் தனம்!!!

0 comments:

Popular Posts

Blog Archive

Followers