போதையெனும் பெருங்கடவுள்.......

தனியாய் இருந்தபொழுது தான் தெரிகிறது இதுவரை தனியாகத்தான் இருந்திருக்கின்றேன் என்று...... 

தனிமையை சுவாசக் காற்றாய் சுவாசித்து உட்கொண்டு தான் இருந்திருக்கிறேன்,
ஒவ்வொரு நொடியும்..... 

கோமான்களிடையே, கோமாளிகளுடனே, 
என எப்பொழுதும் கூட்டத்தோடு கூட்டத்திலே இருந்தாலும் 
நான் 
தனியாகத்தான் இருந்திருக்கின்றேன்...

சுற்றிக்கடல் நீர் இருந்தாலும்  தாகத்திற்கு தண்ணீரற்று திணறியிருக்கிறேன்.... 

கடல் மீனாய்,
கிணற்றுத்தவளையாய் 
திரிந்தும் 
பறந்தும் பார்த்திருக்கின்றேன்....

தினமும் கவிதையெழுதியிருக்கிறேன்!

கவிதைகளை விட அதிகமாய் காதலித்து இருக்கிறேன்....

காதலை விட அதிகமாய் புணர்ந்திருக்கிறேன்,

புணர்தலை விட அதிகமாய் துறந்திருக்கிறேன்....

துறத்தலை விட ஏற்றுக்கொள்ளுதல் ஞானமென்றிருக்கின்றேன்..

ஞானமே உச்சகட்ட போதையென்றிருக்கின்றேன்

போதைதான் பெருங்கடவுள் என்றிருக்கிறேன்..... 

பெருங்கடவுளே நானாயிருக்கிறேன்..... 

வா என்னுடன் வந்து வாழப்பழகு...... 

வாழ்வு மட்டும் தான் அழகு!!! 
வாழ்வு மட்டுமே அழகு

0 comments:

Popular Posts

Blog Archive

Followers