நன்றி

என் மூலமாய்
ஜனித்து
என் மூலமாய்
சுவாசித்து
என் மூலமாய்
புசித்து
என் மூலமாய்
ரசித்தது
என் மூலமாய்
காதலித்தது
என் மூலமாய்
கலவி செய்து
என் மூலமாய்
இசைந்து
என் மூலமாய்
துவேசித்து
என் மூலமாய்
த்வம்சமாகி
என் மூலமாய்
மரித்து
என் மூலமாய்
எல்லாமுமாகிய
இறைமைக்கு நன்றி

1 comments:

SUNDARAN said...

என் மூலமாய்
மரித்து
என் மூலமாய்
எல்லாமுமாகிய
இறை. .........இத்துடனே முடிந்து விட்டது இந்த கவிதை.

Popular Posts

Blog Archive

Followers