இருட்டுக் குடுவை.….

எனது
பெரும்
ரகசியங்களடங்கிய 
ஒரு 
இருட்டுக் குடுவையை 
உன்னிடத்தில் 
பத்திரப்படுத்தி வைத்திருக்கச் சொல்லிச் சென்று,
மறந்து 
திரும்பிய,
அக்கணத்தில் 
பால்வெளியின் 
ஒரு 
மூலையோரத்தில் 
பிரபஞ்சரகசியம் 
எனைப் பார்த்து 
எக்களித்ததைக் கண்டு
என்னவென வினவ,
விடையறியா 
வினாக்களுக்கு
"பிரபஞ்ச இரகசியமென்று" 
இன்னும் 
சொல்லித்திரியும் 
"எத்தர்களுக்கு" 
மத்தியில்
"சித்தன்" 
நீயொருவன் தான்
சிவனென்றுணர்ந்தவனென்றிருந்தோம்....
அய்யகோ 
நீயோ 
உனது 
ரகசியங்களை எப்படி 
இருட்டுக் குடுவையிலடைத்தாயென்ற 
பிரபஞ்சத்தைப் பார்த்துக் கேட்டேன், 
"பரிமாற்றமெனும்" 
பேரிலோ 
அல்லது 
"பரவலாக்கம்" 
எனும் பெயரிலோ 
உனது 
பிரபஞ்ச ரகசியத்தையும் 
எனது 
குடுவை ரகசியத்தையும் அவ்விருட்டுக் குடுவையிலிருந்து உடைத்தெறிவோமா 
எனத் திருப்பிக் கேட்க, 
பதிலறியா 
திகைப்பிலிருந்த பிரபஞ்சத்திடம் 
சொன்னேன்,
என் ரகசியமும் 
உன் ரகசியமும் 
ஒன்றேயென.....
பட்டென கிட்டிய ஞானத்தையெடுத்துக் கொண்டு 
புதிய 
பால்வெளியைத்தேடி 
விர்ரென்று 
கருந்துளைக்குள் 
புகுந்து மறைய, 
நான் 
இப்பொழுது 
உன் 
வீடிருக்கும் 
முட்டுச்சந்தினுள் நிற்கின்றேன் 
என் 
இருட்டுக்குடுவையை 
வேண்டி......

0 comments:

Popular Posts

Blog Archive

Followers