வெல்லுஞ்சொல்


மௌனிக்கப்பட்ட சொற்களில் ஒன்று 
ஆத்திரத்தில் துடித்தது....

என்றாவது 
ஒருநாள் ஒலியாவேன், இம்மானுடத்தவறுகளுக்கு ஒளியாவேன் 
எனச் சபதமேற்றது....

அச்சொல் 
பரிணாம 
வளர்ச்சிக்குட்பட்டு 
விந்தின் 
D.N.A வாக மாறியது....
D.N.A வாக மாறியதில்
சொல்லிற்குச் சிறப்புச் சந்தோசம்...

ஆஹா!!!!
புரட்சியாளன் 
எவனோ ஒருவனை 
பிறக்க வைக்கும் 
விந்தணுவில் 
ஒன்றாய் நானானேன்றால் மௌனிக்கப்பட்ட 
எனது ஒலி சபையேறும் 
என்று 
வெற்றிக்கனவு கண்டது...

ஆண்மகவாய் பிறந்து
வளர்ந்தது, 
D.N.A வாக 
மாறிய 
அந்த 
மௌனிக்கப்பட்ட சொல்....
வாலிபமுமடைந்தது..... 
உச்ச மகிழ்ச்சியடைந்தது அச்சொல்....

16 வயதில்
அச்சொல்லுடைய 
புரட்சித்தம்பி
பாத்ரூமிற்குள் சென்று
கைமதுனமடிக்க......

விரயமானது வீரியமான 
அச்சொல் 
யாருக்கும் பயனின்றி....
———— 
மேற்சொன்ன 
கவிக்கதையின் கருத்து யாதெனில் 
வெல்லுஞ்சொல் என்றொன்றில்லை 
நாம் 
சொல்லுஞ்சொல் 
ஒவ்வொன்றும் 
வெல்லவேண்டும்....
வெல்வோம் வா......

@CupidBuddha 
A.C 2020 April 

( A after C - Corona)



0 comments:

Popular Posts

Blog Archive

Followers