என் புத்தி சுய புத்தி

பகுத்தறிவு அப்படின்னா என்ன அப்படின்னே சரியான புரிதல் இல்லை.......... நமக்கு
அதை பற்றிய சரியான புரிதலும் தெரிதலும் இல்லாத போது அதை பற்றி எப்படி இங்கு எல்லாராலும் மிக வீரியமாக விவாதிக்க முடிகிறது என்று எனக்குள் பல நாட்களாக குடைந்துகொண்டிருக்கிறது கேள்விப்புழு ஒன்று........
அப்புறம் எப்படி இத பத்தி நம்ம விவாதிக்க முடியும்.

ஆதலினால் நானும் இங்கு அதைப்பற்றி விவாதிக்க போகிறது இல்லை
இங்கே நான் பதிவது வெறும் என்னுடைய மனதில் விழுந்த சில கேள்வி மழைத்துளிகள் நீராவியாய் மேலே செல்வதற்கு முன் எனக்குள்ளே அவற்றை நன்கு அசை போட்டு பார்க்கும் ஒரு ஆசை தான்.


பகுத்தறிவு அப்படின்னா கண்ண மூடிக்கிட்டு கடவுள எதிர்க்கிறது, அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு என்னோட மதம் பரவா இல்லை ஒன்னோட மதம் தான் கேவலம் அப்படின்னு சொல்றது....................

சாமியே இல்ல அப்படின்னா அப்புறம் என்ன என்னோட மதம் ஒன்னோட மதம்.????

ரௌத்திரத்துடன் "தன்னோட சாதி அடையாளத்துடன்" பிற சாதியை எதிர்க்கிறது.......

கேட்டா.....பகுத்தறிவு எங்களுக்கு வர விடாம இவுங்க சாதிக்காரவுக தான் தடுத்தாங்க அப்படின்னு சொல்றது.........!!!!ஏம்பா இப்போத்தான் ஒனக்கு பகுத்தறிவு வந்துருச்சே அப்புறம் ஏன் நீ போய் திருப்பியும் அந்த சாதி சனியனை தொங்கிகிட்டு கெடக்குற...?/??


சாதியே இல்ல அப்படின்னு சொல்லிட்டு (மொத்தமா சாதிக்கு முழுக்கு போடுறதுதான் பகுத்தறிவு அப்படின்னு நான் நெனக்கிறேன்)அப்புறம் என்ன என்னோட சாதி ஒன்னோட சாதி.....???

பொது புத்தி, சுய புத்தி என்ற இரண்டுக்கிடையில் கெடந்து நம்ம மக்கள் படுற பாடு இருக்கே....ரொம்ப கஷ்டம்......

சுய புத்தி கடவுள,மதத்தை,சாதிய எல்லாம் நம்புறதுக்கு தயாரா இருந்தாலும்,சில சமயங்களில் நம்பி அதன் பின் போனாலும்,

பொது புத்தி ஒடனே.....நம்ம காதுகிட்ட குசுகுசுன்னு ஒன்னு சொல்லும்பாருங்க.......

டே ராசா..............

நீ இப்படி எல்லாம் செஞ்சாலும் வெளில நாலு பேரு கிட்ட பேசுறப்போ....இப்படி "கடவுள் இல்லை" "சாதி இல்லை" "மதம் இல்லை" அப்படின்னு சொல்றதுல ஒரு அதீத தன்முனைப்பு......

தான் மத்தவுங்கள மாதிரி இல்லை, "நான் ஒரு தனிப்பிறவி" அல்லது "நான் ஒரு முற்போக்கு சிந்தனைக்கு சொந்தக்காரன்" அப்படின்ற தன்முனைப்பு....... ஒன்னு இருக்கு அதுக்கு தீனி போடுற மாதிரி காரியம் செய்யநம் அப்படின்னு பொது புத்தி சொல்லும்.......

அந்த தன்முனைப்பு என்ற யானைக்கு தீனி போட்டு தீனி போடு நம்மள நாமே ஏமாத்திகிட்டு நமக்குள்ளேயே......ஒரு கருத்துபேதம் ஏற்ப்பட்டு அப்புறம் நம்ம நம்மளையே சமாதனப்படுத்திக்கிட்டு

இத எல்லாம் யாராச்சும் சொன்னாலும் அவுங்கள எதிரி மாதிரி பாக்குறது.....இவன் வெதண்டவாதக்காரன்........அப்படின்னு ஒரு எண்ணம்.

யார் சொன்னதையும் கேக்காது ஒன்னோட சுய புத்திக்கு எது சரின்னு தோணுதோ அதை தைரியமா செய்

அதுவே பகுத்தறிவு அப்படின்னா என்னோட மனசுக்கு இப்போ நான் சொன்னதுதான் பகுத்தறிவு அப்படின்னு தோனுது அப்போ நான் ஒரு பகுத்தறிவு வாதிதானே.......

அய்ய பெரியார் சொன்ன பகுத்தறிவு இந்த சாதி மாதங்கள் கடந்த ஒரு புரிதல் ஆனா அது எனக்கும் சரிவர இல்ல

அவுங்கவுங்களுக்கு பகுத்தறிவ எப்படி உபயோகப்படுத்தலாமோ அப்படி "படுத்துகிட்டு" இருக்குறாங்க...

இதுல நான் யாருக்கு போய் பகுத்தறிவ பத்தி பாடம் எடுக்குறது.....இல்லாட்டி எனக்கு போய் யாரு பகுத்தறிவு பாடம் எடுக்க முடியும்.

0 comments:

Popular Posts

Blog Archive

Followers